×

திமுக சார்பில் தண்ணீர் பந்தல்

ராசிபுரம், மே 1: நாமக்கல் கிழக்கு மாவட்டம், ராசிபுரம் நகர திமுக சார்பில் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கி தண்ணீர் பந்தலை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட அணி பொறுப்பாளர்கள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக சார்பில் தண்ணீர் பந்தல் appeared first on Dinakaran.

Tags : festival ,DMK ,Rasipuram ,Namakkal East District ,City DMK ,City Secretary ,Shankar ,City council ,president ,Kavita Shankar ,pandal ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...